கிஷ்கிந்தா காண்டம் --- தொடர்கிறது :: தன்னுடைய வானரங்களை நாலா பக்கமும் அனுப்பி அங்கிருக்கும் மற்ற வானரங்களை கிஷ்கிந்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றனர். அவர்களும் பல கோடி வானரங்கள் வந்து சேர்கிறார்கள். (ஸர் 36-39) விநாடன் என்னும் பெரிய வானரத்தை அழைத்து, கிழக்குப் பக்கம் போய் தேடுமாறு சுக்ரீவன் ஆக்ஞை இடுகிறான். பாரத தேசத்தின் புவி இயலை - ஆறுகள், மலைகள், ராஜ்ஜியங்கள், ஊர்கள் - விரிவாக இந்த ஸர்கத்தில் சொல்லப்படுகின்றன. பாகீரதி (கங்கை), ஸரயூ, கௌஷிகி, யமுனை, ஸரஸ்வதி, ஸிந்து, ஷோனா, மாஹி, காலாமாஹி, ஆகிய நதிகளும், ப்ரஹ்மமாலா, விதேஹம், மாளவம், காசி, கோஸலம், போன்ற ராஜ்யங்களும், மலைகளும், வனாந்திரங்களும் மிக விரிவாக சொல்ல்ப்படுகின்றன (ஸர் 40) ஹனுமான், ஜாம்பவான், நீலன், ஆகிய வானர தலைவர்களை அங்கதன் தலைமையில் தெற்கு திசை நோக்கி அனுப்புகிறான். ஒரு மாதத்திற்குள் திரும்ப வர வேண்டும் எனவும் ஆணையிடுகிறான். (ஸர் 41) தாராவின் தந்தையாகிய சுஷேஷனாவின் தலைமையில் வானரங்களை கிழக்கு திசை நோக்கி அனுப்புகிறான். இவர்களுக்கும் ஒரு மாஸம் அவகாசம் கொடுக்கிறான். (ஸர் 42) ஷடபாலி என்னும் வானரத்தின் தல...