Skip to main content

Grocery Store

நாங்கள் திருவான்மியூர் (மே மாசம், 2011) வந்தது முதல். எங்களுடைய மாதாந்திர மளிகை சாமான்களை ஸ்ரீ மார்த்தாண்டம் ஸ்டோரில் வாங்குகிறோம். பழைய அருண்-வீட்டிற்கு அருகில் இது இருப்பதால் முன்பு கூட சில சில சாமான்களை இங்கு வாங்குவோம்.

அப்போதெல்லாம், கடையின் உள்ளே போய், நாமே சாமான்களை எடுத்து,  ”பார்த்து” வாங்க இயலாது. லிஸ்ட் போட்டுக் கொண்டு போய் கடைக்காரரிடம் சொன்னால், பில் போட்டு, அதற்குண்டான பணம் நாம் செலுத்திய பிறகு, சாமான்கள் நம்மிடம் கொடுக்கப்படும். 

இதில் உள்ள அசௌகரியம் : மார்க்கெட்டில் புதிதாக என்ன சாமான்கள் வந்துள்ளன, எதில் சலுகை விலைகள் உள்ளன, எதில் “ஓசி” சாமான்கள் கிடைக்கும் என்பன போன்றவை நமக்குத் தெரியாது. துவரம்பருப்பு எனக் கேட்டால், லூசில் (loose, unbranded) வாங்கினால் விலை குறைவு, அதே branded பருப்பு என்றால் கிலோவிற்கு 10-12 ரூ அதிகம்.

சென்ற மே மாஸம், கடையை புது வடிவில், புது வண்ணத்தில் மாற்றினார்கள். தற்போது உள்ளே போய் நாமே தொட்டு, எடுத்து பார்த்து சாமான்களை வாங்கலாம். ஏஸி பண்ணப்பட்டுள்ளது. விலையும் பழைய மாதிரியே, குறைவு.

இன்று (4-7-2013) நாங்கள் இவ்வாறு கடையினுள் சென்று சாமான்களை வாங்கினோம். 3 வருஷங்களாக மாதந்தோறும் டெலிஃபோன் மூலம் சொல்வோம்; சாமான்கள் வீட்டிற்கு வந்துவிடும். 

இப்போதும் சாமான்களை எடுத்துக் கொண்டு, பில் போடுபவரிடம் “Home Delivery" என டெலிஃபோன் எண்ணை சொன்னோம்; அரை மணி நேரத்தில் சாமான்கள் டெலிவர் பண்ணப்பட்டன. Free of charge.

இதிலுள்ள சின்ன அசௌகரியம் :: நாம் முதலில் லிஸ்ட்டில் எழுதாத சாமான்களையும் இன்று வாங்கினோம் (100 - 150 ரூ அதிகம் ஆயிற்று.)

ராஜப்பா
4-7-2013
8 PM



Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

Lagnam And How to Select an Auspicious Muhurtham

லக்னம் அமைப்பது எப்படி ? எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் பார்த்தோம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறி விடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அறிந்தோம். கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக்...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011