Skip to main content

ஸீதா கல்யாண வைபோகமே - Vishakha Hari

"ஸீதா கல்யாண வைபோகமே, ராமா கல்யாண வைபோகமே" - இந்த பாடலுடன் விஷாகா ஹரியின் (Smt Vishakha Hari) "சீதா கல்யாணம்" உபன்யாசம் நிறைவடைகிறது. இரண்டு VCDக்கள்.சுமார் 3 1/2 மணி நேரம் போனதே தெரியவில்லை. ஒரு தெய்வீக அனுபவம். நாங்கள் இருவரும் வேறு ஒரு உலகத்திற்கே அழைத்துச் செல்லப்பட்டோம். We both were transported to another world, a pristine and sublime world.

வால்மீகியும், துளசிதாஸரும், கம்பரும், அருணாச்சல கவிராயரும் ("யாரோ, இவர் யாரோ") மிக முக்கியமாக தியாகராஜரும் விஷாகாவின் இந்த உபன்யாசத்தில் தவழ்ந்து வருகிறார்கள். தியாகராஜரின் கீர்த்தனைகள் தேனாக ஒலிக்கின்றன. என்னை விட விஜயா மிகவும் அனுபவித்தாள். பல கீர்த்தனைகளை கூடவே சேர்ந்து பாடிக்கொண்டிருந்தாள்.

அயோத்யாவிற்கு மகரிஷி விஸ்வாமித்திரர் வருவதில் ஆரம்பித்து, அவர் ஸ்ரீராமரை அசுர வதத்திற்கு (யக்ஞத்தை காப்பதற்கு) அழைத்துச் செல்வது, பின்னர் மிதிலாபுரிக்கு செல்வது, இடையில் அகல்யைக்கு சாப விமோசனம் தருவது, மிதிலையில் சிவ தனுஷை முறிப்பது, ஸீதா கல்யாணம் --- என உபன்யாசம் செல்கிறது. கேட்ட கதைதான், ஆனாலும் அந்த அனுபவம் சொல்லி விளக்க முடியாது.

மிகவும் மகிழ்ச்சியான, மனசுக்கு நிம்மதியான, தெய்வீகமான அனுபவம். நீங்களும் கேட்டு அனுபவியுங்கள்.

இன்னும் அந்தப் பரவசத்திலேயே மூழ்கியிருக்கும்

ராஜப்பா
5-20 PM on 31 Dec 2007

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

Lagnam And How to Select an Auspicious Muhurtham

லக்னம் அமைப்பது எப்படி ? எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் பார்த்தோம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறி விடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அறிந்தோம். கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக்...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011