Skip to main content

சென்னை மாநகர பேருந்துகள்

CHENNAI BUSES

நேற்று வியாழன் 30-04-2009 மாலை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தோம். A1 சொகுசு பஸ். கண்டக்டரிடம் 50 ரூபாய் தாளை நீட்டி “மந்தைவெளி ரெண்டு” என்றேன்.

“சார், டிக்கெட் 6 ரூபாய்தான், 6 ரூ கொடுங்க,” என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. சொகுசு பஸ்ஸில் சென்ட்ரல் - மந்தைவெளி ஒரு ஆளுக்கு 7.50, ”இவர் என்ன 3 ரூ என்கிறாரே, சரியாகக் கேட்கவில்லையோ” என நினைத்து, “மந்தைவெளி ரெண்டு” என மீண்டும் அழுத்தி சொன்னேன். “மந்தைவெளிக்கு 3 ரூபாய்தான் சார்,” ஒரு புன்னகையுடன் பதில் வந்தது.

பஸ்ஸில் இருந்த எல்லாருக்குமே ஒரே ஆச்சரியம், கண்டக்டர் என்ன, பணத்தை திருப்பிக் கொடுக்கிறாரே என்று கையிலுள்ள டிக்கெட்டை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள், கண்களை நம்ப முடியாமல்.

விசாரித்ததில், நேற்று விடியற்காலை தமிழக அரசு பஸ் டிக்கெட் fare-களை திடீரென குறைத்துவிட்டதாம். வெள்ளை போர்டு, மஞ்சள் போர்டு, M சீரிஸ், LSS, Express, மிதவை, சொகுசு என விதவித ரேஞ்சுகளில் ஓடிக்கொண்டிருந்த சென்னை மாநகர பஸ்கள் நேற்று காலை முதல் “நாம் எல்லோரும் சமமென்ப துறுதியாச்சு” என எல்லா பஸ்ஸுகளும் இனி ஒரே ரேட்டில் (minimum 2 ரூ) ஓடும் என அரசு நிர்ணயித்துள்ளது !! ஆக மொத்தம் நேற்று எனக்கு 9 ரூ மிச்சம்.

ELECTION STUNT ?

இந்த செயல் தேர்தல் விதிமுறைகளை மீறியது என தேர்தல் ஆணையம் தமிழக அரசை கண்டித்து இருப்பது வேறு விஷயம்.

ராஜப்பா
11:45 , 01 மே 2009

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

Lagnam And How to Select an Auspicious Muhurtham

லக்னம் அமைப்பது எப்படி ? எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் பார்த்தோம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறி விடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அறிந்தோம். கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக்...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011