Skip to main content

காஞ்சிபுரம் சென்றோம் Kanchipuram

KANCHIPURAM

ஜூன் 4, 2009 காலை 0715க்கு, நான், விஜயா, கணேசன் ஆகிய மூவரும் ஒரு call taxi-யில் காஞ்சிபுரம் புறப்பட்டோம். இந்திராவும் வருவதாக இருந்தது, கடைசி நிமிஷத்தில் வர இயலாமற் போயிற்று. கணேசன் சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் காஞ்சி செல்வது வழக்கம். நான்தான் நீண்ட வருஷங்களுக்குப் பிறகு செல்கிறேன்.

போரூர் ஸ்ரீபெரும்பூதூர் வழியாக காஞ்சி சென்றோம்; ஒன்றரை மணி நேரப் பயணம். முதலில், ஸ்ரீராமா கஃபேயில் இட்லி, தோசை சாப்பிட்டோம்; இந்த ஹோட்டல் 65 வருஷங்களாக் இருக்கும் புராதனமான ஹோட்டல்.

பின்னர், ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயிலுக்குச் சென்றோம். இந்தக் கோயிலிற்குப் பக்கத்தில்தான் விஜயாவின் வீடு இருந்ததது.

எங்கள் கல்யாணம் (31-01-1971) இந்தக்கோயிலின் அருகிலுள்ள ராஜகோபால் கல்யாண மண்டபத்தில் நடந்தது. கணேசனும், விஜயாவும் 45-50 வருஷங்கள் பின்னோக்கிச் சென்று பழைய இனிய நினைவுகளில் மூழ்கி விட்டனர்.


பின்பு, விஜயா படித்த Sri Somasundara Kanya Vidhyalaya (SSKV) ஸ்கூலிற்கு சென்றோம். இந்த SSKV ஸ்கூலில் இந்திரா, காமாக்ஷி, விஜயா, லலிதா ஆகிய நால்வரும் படித்தனர். விஜயா மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்கினாள்.


அங்கிருந்து, காஞ்சியின் புகழ்பெற்ற ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோயிலுக்குச் சென்றோம்; விஜயாவின் classmate-ன் தம்பி கோயிலில் கடை வைத்துள்ளார். பழைய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டனர். அம்மன் தரிஸனம் நன்றாகக் கிடைத்தது.


அடுத்து, ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோயிலுக்குச் சென்றோம். முருகனை தரிஸித்துக் கொண்டு, லிங்கப்பைய்யர் தெருவில் உள்ள விஜயாவின் பூர்விக வீட்டைப் பார்க்கச் சென்றோம். இந்த வீட்டில் அவர்கள் 1961 முதல் 1971 வரை குடியிருந்தனர்.

பின்னர், அவர்களுடைய 60-ஆண்டுகளுக்கும் பழைய குடும்ப நண்பர் Dr சிற்சபை (சித்த மருத்துவர்) வீட்டிற்குள் நுழைந்தோம். டாக்டர் சிற்சபை தற்போது இல்லை; காலமாகி விட்டார். அவரது மகன் (கணேசனின் வகுப்புத் தோழன்) டாக்டர் தங்கதுரையைப் பார்த்துப் பேசினோம். இரண்டு குடும்பங்களும் மிக நெருங்கியவை என்பது அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்தது.


அங்கிருந்து ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலிற்குச் சென்றோம். பெருமாள், மற்றும் தாயார் (பெருந்தேவித் தாயார்) தரிஸனம் மிக அருகிலிருந்து கிடைத்தது.


அங்கிருந்து, விஜயாவின் அப்பா ஸ்ரீ யக்ஞஸவாமி அய்யர் வேலை பார்த்த பச்சையப்பன் ஸ்கூலிற்குச் சென்றோம். நூலகம் (Library) கட்டிட நிதியாக ரூ 55,000/- கணேசன் நன்கொடை கொடுத்துள்ளார். இந்த நூலகத்தை திருமதி கனிமொழி (கருணாநிதி) அவர்கள் 17 ஃபிப்ரவ்ரி (2009) அன்று திறந்து வைத்தார்.  

விஜயாவின் அப்பா பெயர் பொறித்த ஒரு commemorative plaque ஸ்கூலில் வைத்திருக்கிறார்கள்.


சங்கீதா ஹோட்டலில் சாப்பிட்ட பிறகு, சென்னை திரும்பினோம். வரும் வழியில், கமலா சித்தி, மற்றும் கணபதிசுப்ரமணியம் வீடுகளுக்குச் சென்றுவிட்டு எங்கள் வீடு திரும்பும்போது இரவு மணி 8-45.


மிக இனிமையாக ஒரு நாள் பொழுது ஓடியது.


ராஜப்பா
6-6-2009 11.00 மணி

Comments

காஞ்சீபுரம் விஜயம் விவரங்கள் நன்றாய் இருக்கின்றன. நன்றி.
Anonymous said…
It's very good Sir... Your article describes once more 'Autograph'. It helps to remember our old memories in our olden days.
Nice. Please keep it up your good writing.

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

Lagnam And How to Select an Auspicious Muhurtham

லக்னம் அமைப்பது எப்படி ? எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் பார்த்தோம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறி விடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அறிந்தோம். கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக்...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011