Skip to main content

குருக்ஷேத்திரம் - ஸ்ரீமத் பகவத்கீதை

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் முன்னோரான குரு என்னும் மஹாராஜா இந்த ஊருக்கு வந்து அஷ்ட குணா வித்துக்களை விதைக்க ஆசைப்பட்டார். மனிதனுக்கு நல்லது சொல்லி, அவனை பகவானிடம் சேர்க்க, இந்த எட்டு நற்குணங்களும் தேவை என அவர் உறுதியாக நம்பினார்.


தபசு (உடலையும், உள்ளத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருத்தல்), தயா (எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டுதல்), க்ஷமா (எல்லாரிடத்திலும் பொறுமை காத்தல்), சௌசம் (மனதிலும், உடலிலும், வாக்கிலும் தூய்மை), தானம் (தனக்கு உபயோகமாயிருப்பதை தேவையான பிறருக்கு தானமாக தருதல்), ஸத்யம் (எப்போழுதும் உண்மையே பேசுவது), யக்ஜம் (ஸாஸ்திரம் சொல்லியுள்ள கர்மங்களை தினமும் செய்வது), ப்ரஹ்மசரியம், ஆகியவையே இந்த எட்டு குணங்கள்.

இவரது குறிக்கோளை அறிந்து, மனமகிழ்ச்சி அடைந்த பகவான், இந்த ஊரே உன் பெயரால் இன்றுமுதல் குருக்ஷேத்திரம் என அழைக்கப்படும் என்று அருளினார். இங்குதான் மஹாபாரத யுத்தம் நிகழ்ந்தது; ஸ்ரீமத் பகவத் கீதையும், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமமும் இங்குதான் அருளப்பட்டன.

தர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ---” என்று துவங்கும் கீதையின் முதல் ஸ்லோகத்துடன் சுமார் மூன்று வருஷங்களுக்கு முன்பு கீதை உபன்யாசத்தை ஆரம்பித்த ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன், இன்று (2-11-2009) கீதையின் இறுதி பாகத்தை குருக்ஷேத்திரத்திலேயே தொடங்கினார்.

எல்லாரும் இதைக் கேட்டு பகவான் அருளைப் பெற ஆசைப்படுகிறேன்; காலை 6-30 மணிக்கு பொதிகையில். முயற்சி செய்யுங்கள்; ஸ்ரீ கிருஷ்ணன் அருள் கிட்டட்டும்.

ராஜப்பா
இரவு 8-45 மணி
2-11-2009

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

Lagnam And How to Select an Auspicious Muhurtham

லக்னம் அமைப்பது எப்படி ? எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் பார்த்தோம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறி விடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அறிந்தோம். கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக்...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011