Skip to main content

ஸ்ரீ ஸத்யநாராயண வ்ரத பூஜை - 18.02.2011

நீரஜாவும் அஷோக்கும் சில வருஷங்களாக ஸ்ரீஸத்ய நாராயண வ்ரத பூஜை அனுஷ்டித்து வருகிறார்கள். இந்த வ்ரதத்தை பற்றியும் அவர்கள் 29 மார்ச் 2010 அன்று பூஜை செய்த விவரத்தையும் இங்கு படிக்கலாம்.
இந்த (2011) வருஷம் அவர்கள் 18 ஃபிப்ரவரி 2011 (வெள்ளிக்கிழமை) அன்று இந்த பூஜையை செய்தனர். விஜயாவும் நானும் சென்னையிலிருந்து 17-ஆம் தேதி பிற்பகல் பெங்களூர் சென்றோம்.

பூஜைக்கான ஏற்பாடுகளை (சாமான்கள் வாங்குதல் போன்றவை) நீரஜாவும், அஷோக்கும் ஏற்கனவே செய்து முடித்திருந்தனர். 18-ஆம் தேதி மாலை 4 மணிக்கு வீட்டை மெழுகி, துடைத்து, ஸ்வாமி படத்தை எடுத்து வைத்து, அலங்கரித்து பூஜைக்குத் தயாராகினோம். நீரஜா எலுமிச்சம்பழ சாதம், ரசஞ்சாதம், தயிர் சாதம், உ.கிழங்கு கறி செய்தாள். மாமி, மாமா, ஸ்ரீவள்ளி ஆகியோர் 4-45க்கு வந்தனர். நைவேத்யத்திற்கு மாமி ரவாகேஸரி பண்ணி எடுத்து வந்தார்.
சாஸ்திரிகள் 5-45க்கு பூஜையை ஆரம்பித்தார்.சென்னை மயிலாப்பூரிலிருந்து நாங்கள் வாங்கிச் சென்ற புடவையை நீரஜா அணிந்து கொண்டாள். மிகவும் விரிவான பூஜை. ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ர 1008 நாமாவளியுடன் பூஜை 8-15க்கு நிறைவுற்றது. மாமியும், விஜயாவும் 1008 நாமாவளியையும் அவருடன் சேர்ந்து சொன்னார்கள்.


பூஜைக்கு தயாராகிறது

 தீபாராதனை, நமஸ்காரத்திற்கு பின்னர் சாஸ்திரிகள் ஸ்ரீஸத்ய நாராயண வ்ரத மஹாத்மிய கதைகளை (கன்னடத்தில்) சொன்னார். இவ்வாறாக, இந்த வருஷமும் (2011) பூஜை வெகு சிறப்பாக நடந்தது. நீரஜாவையும் அஷோக்கையும் ஸத்ய நாராயணர் ஆசீர்வதிக்கட்டும். GOD Bless them both.




We returned to Chennai on 22nd Feb 2011.
rajappa
10:15 AM
24-02-2011

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

Lagnam And How to Select an Auspicious Muhurtham

லக்னம் அமைப்பது எப்படி ? எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் பார்த்தோம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறி விடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அறிந்தோம். கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக்...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011