Skip to main content

விநாயகர் சதுர்த்தி - 2012


விநாயகர் சதுர்த்தி - 2012.


இந்த ஆண்டின் (2012) விநாயகர் சதுர்த்தி 19 செப்டம்பர் புதன்கிழமை வந்தது. பாத்ரபதம் மாஸம், சுக்ல சதுர்த்தியன்று இது நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. பூக்கள், பத்ரங்கள், பழங்கள் இவற்றை கிருத்திகாவின் அப்பா கோயம்பேட்டிலிருந்து தருவித்தார். 18-ஆம் தேதியன்று நானும், விஜயாவும் மார்க்கெட் சென்று மீதி பழங்களையும், வெற்றிலை முதலானவைகளையும் வாங்கினோம்.

19-ஆம் தேதி காலையில் கிருத்திகா பூஜை அறையையும் மற்ற பூஜா சாமான்களையும் நன்கு அலம்பி சுத்தம் பண்ணினாள். 10.30க்கு அர்விந்த் பிள்ளையார் உருவம் வாங்கி வந்தான். அதிதியும் சென்றாள். TSGக்கும் சேர்த்து இரண்டு வாங்கினான். கிருத்திகா பிள்ளையாருக்கும் அலங்காரம் பண்ணினாள்.
முதல் நாளே விஜயா மாவு அரைத்து ரெடி பண்ணிக் கொண்டாள். இன்று காலை அவள் மிக மும்முரமாக சமையல் வேலையில் ஈடுபட்டாள். தனியாகவே முழுதும் செய்தாள். மூன்று வித கொழுக்கட்டைகள், வடை, பாயஸம், முருங்கை சாம்பார், கோஸ் கறி பண்ணினாள்.

பூஜை ஆரம்பிக்க மிகவும் லேட்டாகியது. 12 மணிக்குத்தான் ஆரம்பிக்க முடிந்தது. நான் மந்திரம் சொல்ல, அர்விந்த் பூஜை செய்தான். முடிக்கும்போது 1 மணிக்கும் மேலாகி விட்டது. 1-45க்கு சாப்பாடு.

இவ்வாறாக இந்த ஆண்டு விநாயகர் பூஜை நன்கு நடந்தேறியது. காயத்ரியும் 11 மணிக்கு செய்தாள். நீரஜா பண்ணவில்லை.



குழந்தை அர்ஜுனுக்கு இது முதல் பிள்ளையார்-சதுர்த்தி.
பூஜை முடிந்ததும் குழந்தை அதிதி நிறைய பாடல்கள் பாடினாள். ”எனக்கு வேண்டும் வரங்களை ..” பாட்டைத் தவறாமல் பாடினாள்.

எல்லாருக்கும் விநாயகர் அருள் பண்ணுவார்.

ராஜப்பா
20-9-2012
காலை 9:15

பின்குறிப்பு: இன்று (20-09-2012) மாலை 5 மணிக்கு பெஸண்ட்நகர் கடலுக்கு அதிதியும் கிருத்திகாவும் சென்று பிள்ளையாரை வழியனுப்பி வந்தனர்.

Comments

Popular posts from this blog

ஊன மாஸிகம், வருஷாப்திகம் விதிகள்

வருஷாப்தீகத்திற்கு பொதுவாக செய்ய வேண்டியவை. யஜூர் வேதம் ஆபஸ்தம்ப ஸூத்ரம் : மற்ற வேதம், சூத்திரங்களுக்கு சில மாறுதல்கள் இருக்கும். ஊன மாசிகம். 340 நாட்களுக்கு மேல் 355 நாட்களுக்குள் ஒரு நல்ல நாள் பார்த்து செய்ய வேண்டும். பிரதமை, சஷ்டி, சதுர்தசி, அமாவாசை, வெள்ளி கிழமை , க்ருத்திகை கேட்டை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி. நக்ஷ்த்திரங்கள், இவைகளில் ஊனமாசிகம் செய்யக்கூடாது . த்விதியை,,சப்தமி, த்வாதசி என்ற திதிகள், க்ருத்திகை, புனர்வஸு, உத்ரம்,விசாகம், உத்திராடம், , பூரட்டாதி என்ற நக்ஷதிரங்கள், ஞாயிறு, செவ்வாய், சனி என்ற வாரங்கள் இவைகளில் மூன்று சேர்ந்தால், த்ரிபுஷ்கரம், இரண்டு சேர்ந்தால் த்விபுஷ்கரம், இம்மாதிரி வந்தாலும் ஊன மாசிகம் இந்த நாட்களில் செய்யக் கூடாது.  சாஸ்த்ரிகள் இவைகளை பார்த்து ஒரு நாள் பார்த்து சொல்வார். இந்த ஊன ஆப்தீகத்திற்கு ச்ராத்த சமையல் .மற்ற ஊன மாசிகம் செய்தது போல் ஹோமம் உண்டு. இந்த மாசிகத்தின் போது இதற்கு முன்னால் மாசிகம்  செய்ய முடியாது விட்டு போயிருந்தால் இப்போது அவைகளயும் சேர்த்து செய்ய வேண்டும். விட்டு போன மாசிகம் களுக்கு அரிசி, வாழைக்காய், தக்ஷிணை யாவ...

Lagnam And How to Select an Auspicious Muhurtham

லக்னம் அமைப்பது எப்படி ? எந்த காரியத்திற்காக எந்த ராசியை தேர்ந்தெடுக்கிறோமோ அதுவே லக்னம் ஆகும். (தேர்ந்தெடுக்கும் வரை ராசி தேர்ந்தெடுத்த பின்னரே லக்கினம்). ஒவ்வொருநாளும் ஒரு குறிப்பிட்ட ராசியின் குறிப்பிட்ட டிகிரியில் சூரியன் உதிக்கிறார் என்பதையும், ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் வீதம் 1440 நிமிடங்களில் அதாவது 24 மணி நேரத்தில் ராசி மண்டலம் முழுவதையும் சூரியன் கடக்கிறார் என்பதையும் பார்த்தோம். பூமி சூரியனைச் சுற்றும் பாதையில் சற்று முன்னேறி விடுவதால் முதல் நாள் உதித்த அதே இடத்தில் அன்றி சூரியனும் சற்றுத் தள்ளி உதிக்கிறான் என்பதையும் அறிந்தோம். இந்தத் தள்ளுதல் ராசி இருப்பில் சராசரியாக 4 நிமிடங்களைக் குறைக்கும் என்பதையும் அறிந்தோம். கோசாரம் என்பது க்ரஹங்களளின் தற்கால நிலையைக் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி, ராகு, கேது ஆகிய அனைத்து க்ரஹங்களுமே சூரியனை முன்னோக்கியோ பின்னோக்கியோ ஒரு குறிப்பிட்ட தனக்கே உரித்தான வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் அந்தந்த க்ரஹங்கள் ராசி மண்டல்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் எந்த இடத்தில் இருக்கின்றன என்பதைக்...

எனக்கு வேண்டும் வரங்களை ...

எனக்கு வேண்டும் வரங்களை          இசைப்பேன் கேளாய் கணபதி! மனத்திற் சலன மில்லாமல்,         மதியில் இருளே தோன்றாமல், நினைக்கும் பொழுது நின் மவுன         நிலைவந் திடநீ செயல் வேண்டும், கனக்குஞ் செல்வம் நூறு வயது;        இவையும் தரநீ கடவாய்! பிள்ளையார் மீது மஹாகவி பாரதியார் எழுதிய பாடல். சமீப காலமாக அதிதி இந்தப் பாடலை எப்போதும் பாடிக் கொண்டே இருப்பதால், நானும் எழுதினேன். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அதிதி இதை எனக்கு வார்த்தை வார்த்தையாக டிக்டேட் செய்தாள். ராஜப்பா 10:55 20-05-2011